கர்நாடகாவில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் வரும் 7 அன்று நடைபெறு கிறது. இதற்காக பிரதமர் மோடி பிரம்மாண்ட பிரச்சார பயண ஏற்பா டுகளை அறிவித்தார். ஆனால் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரு மான தேவகவுடாவின் பேரனுமான ஹாசன் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 300 பெண்களை பாலியல் வன்கொ டுமை செய்த விவகாரம் வீடியோ ஆதாரத்துடன் கசிந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றவாளி என்று தெரிந்தும் அவருக்கு பாஜக சீட் கொடுத்தது மட்டுமில்லாமல், அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தது ஏன்? என கர் நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் கண்டனக் குரல் கிளம்பின. இத னால் பிரதமர் மோடி கர்நாடகா சுற்றுப்பயண நிகழ்வை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, மேற்கு வங்கத்திற்கு ஓட்டம் பிடித்தார்.
பிரதமர் மோடி வெள்ளியன்று மேற்கு வங்க மாநிலத்திற்குச் சென்ற நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய ஆளுநர் சி.வி.ஆனந்த் போ ஸின் மாளிகையிலேயே எப்படி கூச்சம் இல்லாமல் பிரதமர் மோடி தங்குகிறார்? என சமூகவலைத் தளங்களில் மேற்குவங்க மக்கள் கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர். கர்நாடகத்தில் கூட்டணி கட்சியின் பாலியல் பிரச்சனையால் தான் பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றார். ஆனால் அங்கேயும் ஆளு நரின் பாலியல் வக்கிரங்களால் என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமர் மோடி விழிபிதுங்கியுள்ளார்.